இந்திய அளவில் மிகப்பெரிய ஊழல் நடந்தும், எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்த பின்பும், உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்பும் ஒன்றும் நடவாத மாதிரி நடந்துகொள்ளும் பிரதமரையும், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவரையும் என்னவென சொல்வது ? தன் கட்சி அமைச்சர் தவறு செய்தார் என தெரிந்த பின்னரும், அவரை காப்பாற்றுவது போல் அறிக்கைவிடும் கட்சித்தலைவர்கள் இருக்கும் வரை தமிழகத்தையும், இந்தியாவையும் யாரும் காப்பாற்ற முடியாது. அரியலூர் ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்த லால் பகதூர் சாஸ்திரி, கடைசிவரை தனக்காக வாழாமல் பிறற்காக வாழ்ந்த பெரியார், காமராஜர், கக்கன் வாழ்ந்த பூமியில் இது போன்ற பிறவிகளும் வாழ்கின்றனவே ?
அமைச்சர்களுக்கு எல்லாம் தலைவராகவே, பிரதம அமைச்சர் நியமிக்கப்படுகிறார். எதையும் தட்டிக் கேட்க முடியாமல் பதவியில் ஏன் இவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. சமீபத்தில் சோனியாகாந்தி பிரதமரின் நேர்மையை குற்றம் சொல்பவர்களுக்கு தானே தீது வந்து சேரும் என்கிறார். அவரின் நேர்மையை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் மற்ற அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக்கூட கண்காணிக்க முடியவில்லை என்றால், தட்டிக்கேட்க முடியவில்லை என்றால் நேர்மையாக இருந்து என்ன பயன் ?
No comments:
Post a Comment